நிர்மலா தேவி விவகாரத்தில் நடந்தது என்ன?... விசாரணையைத் தொடங்கினார் அதிகாரி சந்தானம்!
பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை உயர்அதிகாரிகளின் பாலியல் ஆசைக்கு இணங்க வைக்க முயற்சித்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் நியமித்த சந்தானம் ஒரு நபர் குழுவின் விசாரணை தொடங்கியுள்ளது.
Recommended Video

மதுரை: பேராசிரியை நிர்மலா விவகாரம் குறித்து ஆளநர் நியமித்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் மதுரையில் விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு சென்ற போது தம்மை அணுகிய அதிகாரிகள் மாணவிகளை படுக்கைக்கு அழைத்து வந்தால் படிப்பில் சலுகையும், பண உதவியும் செய்வதாகக் கூறியதாக பேராசிரியை நிர்மலா அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் தொலைபேசியில் தெரிவித்தார். கடந்த மார்ச் மாதத்தில் நடந்த இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திட்ம் புகார் அளித்தும் ஒரு மாதத்திற்கு பிறகு அவர் மீது தற்காலிக பணியிடை நீக்கம் மட்டுமே செய்தது.

இதனையடுத்து மாணவிகளிடம் நிர்மலாதேவி பேசிய தொலைபேசி ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதையடுத்து பிரச்னை விஸ்வரூபமெடுத்தது. பல்கலைக்கழகப் பேராசிரியர்களோடு, ஆளுநர் பெயரும் இந்த ஆடியோவில் இடம்பெற்றதால் பிரச்னை பூதாகரமானது.
இதனையடுத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்த விசாரணைக்குழுவை ரத்து செய்துவிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான ஒரு நபர் விசாரணைக்குழுவிற்கு உத்தரவிட்டார். இந்நிலையில் அதிகாரி சந்தானம் இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விசாரணையை தொடங்கியுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சென்றுள்ள அவர் முதற்கட்டமாக பதிவாளர் சின்னையாவிடம் விசாரணையை தொடங்கியுள்ளார். மாணவிகள் புகார் அளித்தும் காலதாமதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன், நிர்மலா தேவியுடன் தொடர்புடைய பேராசிரியர்கள் யார் யார் என்றும் சந்தானம் விசாரணை நடத்துகிறார்.
இன்று முதல் 3 நாட்களுக்கு சந்தானம் மதுரையில் தங்கி விசாரணை நடத்த உள்ளார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளி பேராசிரியை நிர்மலா தேவி சிறையில் இருப்பதால் அவருக்கு கேள்விகள் அளித்து அதற்கு விளக்கம் பெற திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனிடையே நிர்மலாவிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி டிஎஸ்பி ராஜேஸ்வரி தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications