மெரினா கலவரம்... ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் அம்பேத்கர் பாலத்தில் ஆய்வு
மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் முடிவில் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன், அம்பேத்கர் பாலத்தில் வசிக்கும் பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆய்வு மேற்கொண்
சென்னை: மெரினா கலவரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் தலைவர் ராஜேஷ்வரன் அம்பேத்கர் பாலம் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் தொடர் போராட்டம் மாணவர்களால் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் முடிவில் கலவரம் வெடித்தது.
இந்தக் கலவரத்தில் போலீசாரே குடிசைகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்தனர். இது பெரும் அதிர்ச்சியை தமிழக மக்களிடையே ஏற்படுத்தியது.

ஒரு நபர் கமிஷன்
இதனையடுத்து, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு ஒன்றை அமைத்தார். இந்தக் குழு கலவரம் குறித்து தமிழகம் முழுவதும் விசாரணை செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

கள ஆய்வு
இதன்படி, விசாரணைக் குழுவின் தலைவர் ராஜேஷ்வரன், கலவரம் தொடங்கிய மெரினாவில் ஆய்வை தொடங்கினார். பின்னர், மதுரை, அலங்காநல்லூர், கோவை, சேலம் உள்ளிட்ட கலவரம் நடைபெற்ற இடங்களை ஆய்வு செய்தார்.

அம்பேத்கர் பாலத்தில் ஆய்வு
இதன் தொடர்ச்சியாக இன்று மெரினா கலவரம் நடைபெற்ற பகுதியில் உள்ள அம்பேத்கர் பாலத்திற்கு ராஜேஷ்வரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சுமார் 100க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.

அறிக்கை
பாதிக்கப்பட்டவர்கள், கலவரத்தை நேரில் பார்த்தவர்கள் என அனைவரும் ஒரு நாள் அழைக்கப்பட்டு முழு விசாரணையை நீதிபதி ராஜேஷ்வரன் மேற்கொள்வார். முழு விசாரணை நடத்தி முடித்த பின்னர், 3 மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை அவர் தமிழக அரசுக்கு அளிப்பார்.
-
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications