மெரினா கலவரம்... ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் அம்பேத்கர் பாலத்தில் ஆய்வு
மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் முடிவில் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன், அம்பேத்கர் பாலத்தில் வசிக்கும் பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆய்வு மேற்கொண்
சென்னை: மெரினா கலவரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் தலைவர் ராஜேஷ்வரன் அம்பேத்கர் பாலம் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் தொடர் போராட்டம் மாணவர்களால் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் முடிவில் கலவரம் வெடித்தது.
இந்தக் கலவரத்தில் போலீசாரே குடிசைகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்தனர். இது பெரும் அதிர்ச்சியை தமிழக மக்களிடையே ஏற்படுத்தியது.

ஒரு நபர் கமிஷன்
இதனையடுத்து, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு ஒன்றை அமைத்தார். இந்தக் குழு கலவரம் குறித்து தமிழகம் முழுவதும் விசாரணை செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

கள ஆய்வு
இதன்படி, விசாரணைக் குழுவின் தலைவர் ராஜேஷ்வரன், கலவரம் தொடங்கிய மெரினாவில் ஆய்வை தொடங்கினார். பின்னர், மதுரை, அலங்காநல்லூர், கோவை, சேலம் உள்ளிட்ட கலவரம் நடைபெற்ற இடங்களை ஆய்வு செய்தார்.

அம்பேத்கர் பாலத்தில் ஆய்வு
இதன் தொடர்ச்சியாக இன்று மெரினா கலவரம் நடைபெற்ற பகுதியில் உள்ள அம்பேத்கர் பாலத்திற்கு ராஜேஷ்வரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சுமார் 100க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.

அறிக்கை
பாதிக்கப்பட்டவர்கள், கலவரத்தை நேரில் பார்த்தவர்கள் என அனைவரும் ஒரு நாள் அழைக்கப்பட்டு முழு விசாரணையை நீதிபதி ராஜேஷ்வரன் மேற்கொள்வார். முழு விசாரணை நடத்தி முடித்த பின்னர், 3 மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை அவர் தமிழக அரசுக்கு அளிப்பார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications