நெல்லை: குடோனுக்கு சென்ற லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகள் சாலையில் விழுந்து பாழ்
நெல்லை: பாளையிலிருந்து குடோன்களுக்கு அரிசியை ஏற்றி சென்ற லாரியிலிருந்த அரிசி மூட்டைகள் ரோட்டில் தவறி விழுந்து வீணானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய உணவு கழகத்தி்ற்கு சொந்தமான குடம் பாளை ஸ்ரீபுரத்தில் உள்ளது. நெலலைக்கு சரக்கு ரயில்களில் கொண்டு வரப்படும் அரிசி மூட்டைகள் இந்த குடோன்களில் இறக்கி வைக்கப்படுகின்றன. அங்கிருந்த மாநகரத்தில் உள்ள மற்ற குடோன்களுக்கு அவை கொண்டு செல்லப்படும்.
பாளை சராள்தாக்கல் கல்லூரி அருகே உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்திற்கு அரிசி மூட்டைகள் 10க்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டு வரப்பட்டன. அவை கல்லூரி அருகே உள்ள திருப்பத்தில் கவன குறைவாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகள் சாலைகளில் விழுந்து சிதறின. ஓரிரு மூட்டைகள் உடைந்து சாலைகளில் அரிசி கொட்டியது.
சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் பலர் வறுமையில் மடியும் நிலையில் உலகம் இருக்கையில், இவ்வாறு பொது வினியோக திட்டத்தில் கொண்டு செல்லப்படும் சாப்பாட்டு அரிசி வீணானதைக் கண்டு அப்பகுதி மக்கள் வேதனை அடைந்தனர். மேலும், சிதறிய அரிசி மூட்டையிலிருந்து வீணான அரிசியை அங்கிருந்து உடனடியாக அகற்ற லாரி டிரைவர்களோ, குடோன் பொறுப்பாளர்களோ நடவடிக்கை எடுக்க வில்லை..
அத்தோடு, லாரிகளில் மேலும் சில மூட்டைகள் கிழே விழும் நிலையிலேயே குடோன்களுக்கு புறப்பட்டுச் சென்றன அந்த லாரிகள். இது போன்ற அரிசி மூட்டைகள் உள்ளிட்டவற்றை மூடிய லாரிகளில் கொண்டு செல்லாமல் அரை லோடு லாரிகளில் வெயில், மழைகளில் கொண்டு செல்வதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளனர்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications