ஆந்திர மீனவர்கள் மீண்டும் தாக்கும் அச்சம்- வயல்வெளியில் தஞ்சமடைந்த தமிழக மீனவர்கள்!!
பொன்னேரி: சென்னை அருகே கிராமங்களுக்குள் புகுந்து ஆந்திர மீனவர்கள் நடத்திய தாக்குதலால் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் 200-க்கும் மேற்பட்டோர் வீடுகளுக்கு திரும்பாமல் குழந்தைகளுடன் வயல்வெளிகளில் தவித்து வருகின்றனர்.
சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தமிழக மீனவர்கள் மீது ஆந்திர மீனவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து தாக்குதல் நடத்தினர். இன்றும் அவர்கள் தாக்குதல் நடத்தலாம் என்று அந்த மீனவ கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதனால் வீடுகளை விட்டு வெளியேறிய பெண்கள் 200-க்கும் மேற்பட்டோர் வயல்வெளியில் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கேய சமைத்து தங்கி உள்ள அவர்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அச்சத்தில் தவிக்கின்றனர்.
ஆந்திர மீனவர்கள் மீண்டும் தாக்குதலில் ஈடுபடலாம் என்பதால் 200-க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து கண்கானிப்பில் ஈடுபட்டுள்ளனர். கலவர தடுப்பு போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே இத்தாக்குதலில் ஈடுபட்டதாக மீனவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications