தொடரும் மீ்ன் பிடி தடைகாலம்-உச்சத்தில் மீன்கள் விலை
தூத்துக்குடி: மீன்பிடி தடைக்காலத்தை ஒட்டி தூத்துக்குடியில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் நுகர்வோர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு மீன்பிடிக்க 45 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லை.

மீன்பிடி தடை காலம் கடந்த ஏப்ரம் மாதம் 15ம் தேதி தொடங்கியது. இந்த மாதம் 29ம் தேதி வரை தடைக்காலம் நீடிக்கும். இதன் காரணமாக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நாட்டு படகுகள் மற்றும சிறு துடுப்பு படகுகள் மூலம் மட்டுமே தற்போது மீன்பிடி தொழில் நடந்து வருகிறது. இதனால் குறைந்த அளவே மீன் கிடைத்து வருகிறது.
தற்போது கோடை காலம் என்பதால் கோழிக்கறி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து மீன்கள் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் மீன்களின் வரத்து குறைவு காரணமாக அவற்றின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக சீலா, வஞ்சிரம் மீன்கள் கிலோ ரூ.1000 வரையும், விளை மீன்கள் ரூ.500, ஊழி மீன் ரூ.600 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. சாளை மீன்கள் ரூ.10க்கு 3 என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்றன.
மீன்பிடி தடை எதிரொலியாக விசைப்படகு மீனவர்கள் தங்கள் படகுகளில் மீன்பிடி உபகரணங்களை பழுது பார்த்தல், பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி பகுதியில் மீனவர்கள் மிக தீவிரமாக வலைகளை பழுது பார்த்து வருகின்றனர். மேலும் படகுகளுக்கு பெயிண்டிங் உள்ளிட்ட பணிகளை கவனித்து வருகின்றனர். மீன் பிடி தடைக்காலத்தில் அரசு உதவி தொகை முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications