For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர்களை போல வேறு யாராலும் அமைதியாக போராட முடியாது.. ஆர்.ஜே.பாலாஜி, ஜி.வி.பிரகாஷ்

மெரினாவில் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் நடிகர்கள் ஆர்.ஜே.பாலாஜி, ஜி.வி.பிரகாஷ் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழர்களை போல வேறு யாராலும் இந்த அளவுக்கு அமைதியாக போராட முடியாது என நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் நேற்று காலை தொடங்கிய போராட்டம் நள்ளிரவை தாண்டியும் நடந்து வருகிறது. போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்கள் மத்திய அரசு மற்றும் பீட்டா அமைப்புக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

 rj balaji and gv prakash comes to support

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்து தங்களுடன் பேசும் வரை போராட்டம் நீடிக்கும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். மெரினா போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் நள்ளிரவில் போராட்ட களத்திற்கு வந்தனர்.

அப்போது இளைஞர்கள் மத்தியில் பேசிய பாலாஜி, அனைத்து பிரச்சினைக்கும் இதே போன்ற ஒருமித்த குரலுடன் இணைந்து போராட வேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்கு இனி இளைஞர்கள் தொடர்ந்து போராடுவார்கள். தமிழர்களை போல வேறு யாராலும் இந்த அளவுக்கு அமைதியாக போராட முடியாது.

போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. கண்ணாடி எதையும் உடைக்கவில்லை. மது அருந்தவில்லை. அமைதி வழியில் போராடி வருவதாக அவர் கூறினார்.

English summary
Actor R.J. Balaji and G.V.prakash has support for jallikattu protest in chennai marina
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X