ஆர்.கே.நகர் தேர்தல்.. கட்டுப்பாட்டு அறைக்கு குவிகிறது தொலைபேசி அழைப்புகள்
கடந்த 10 நாட்களில் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு 60 புகார்கள் வந்தன. தேர்தலில் பணம் வினியோகம் செய்வதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள், ஆலோசனைகளை வழங்கி மக்கள் பேசியுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு செயல்படுகிறது.
கடந்த 10 நாட்களில் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு 60 புகார்கள் வந்தன. இந்த புகார்கள் அனைத்தும் பணம் கொடுப்பது தொடர்பாகவோ விதி மீறல் குறித்து கூறப்படவில்லை. ஆனால், தேர்தலில் பணம் வினியோகம் செய்வதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள், ஆலோசனைகளை வழங்கி மக்கள் பேசியுள்ளனர். இதை கட்டுப்பாட்டு அறையிலுள்ளவர்கள் பதிவு செய்துள்ளனர்.

இதுபற்றி சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு நடத்திய வாகன சோதனையில் ரூ. 7 லட்சம் பிடிபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications