இன்னும் மொட்டே விடல .. எப்போ மலருவது.. ஆர்கே நகரில் அதலபாதாளத்தில் தாமரை!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
Recommended Video

சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. நோட்டாவை விட இரு மடங்கு வாக்கு குறைவாக பெற்று பாஜக அதள பாதாளத்தில் உள்ளது.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சுயேச்சையாக போட்டியிட்ட சசிகலாவின் அக்காள் மகன் தினகரன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
ஆளும் அதிமுக பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது திமுக டெப்பாசிட் வாங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நோட்டாவுடன் போட்டி
பாஜக மிகக்குறைந்த வாக்குகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. பாஜக தொடக்கம் முதலே நோட்டாவுடன் தான் போட்டி போட்டு வருகிறது.

பாஜக ஆட்சியை பிடிக்கும்
நாட்டின் மிகப்பெரிய கட்சியான பாஜக தமிழகத்தில் இன்னும் தவழ கூட தொடங்கவில்லை என்பதையே இந்த தேர்தல் காட்டுகிறது. தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் காலம் வரும் பாஜக காலூன்றும் என்றெல்லாம் தமிழக பாஜகவினர் சவடால் விட்டு வருகின்றனர்.

பாஜகவினருக்கு அதிர்ச்சி
இந்நிலையில் பாஜக தமிழகத்தில் எந்திரிக்க முடியாத நிலையில் உள்ளது என்பது இந்த தேர்தலில் தெரியவந்துள்ளது. மேடைக்கு மேடை தமிழகத்தில் தாமரை மலரும் பாஜக ஆட்சி மலரும் என கூறிவந்த பாஜக தலைவர்களுக்கு இடைத்தேர்தல் முடிவு அதிர்ச்சியாகவே இருக்கும்.

எப்போது மலருவது?
ஆர்கே நகர் இடைத்தேர்தல் நோட்டாவுடன் பாஜக மல்லுக்கட்டி வருவதில் இருந்து தமிழகத்தில் பாஜக இன்னும் மொட்டே விடவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இப்படி இருக்கையில் தமிழகத்தில் எப்போது பாஜக மலருவது?












Click it and Unblock the Notifications