யாருக்கும் வெட்கமில்லை... வெள்ளமாக புரண்டோடும் பணத்துக்காக அலைபாயும் ஆர்கே நகர் வாக்காளர்கள்!
ஆர்கே நகரில் பணம் வெள்ளமென கரைபுரண்டோடுகிறது... கிடைக்கிறவரை ஆதாயம் எனும் மனநிலையில் வாக்காளர்களும் பணத்துக்காக அலைபாயும் வெட்கக் கேடான நிலையை பார்க்க முடிகிறது.
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தல் திருவிழாதான்... ஆம் பணம் கொட்டோ கொட்டெனும் திருவிழாதான்... ஜனநாயக மாண்புகள் கிலோ என்ன விலை என கேட்கிற துணிகர மானங்கெட்ட திருவிழாவாகிப் போனதுதான் துயரம்.
ஆர்கே நகர் தொகுதியான 3 ஆண்டுகளில் 3 இடைத் தேர்தல்களை எதிர்கொண்டு விட்டது. ஒவ்வொரு தேர்தலிலும் பணம் வாரியிறைக்கப்பட தேர்தல் என்பது பண அறுவடைக்காலமாகிப் போய்விட்டது.

தலைகீழாக்கிய தினகரன்
அதுவும் அதிகாரத்தைக் கைப்பற்ற வெறிபிடித்தவராக தினகரன் வகையறாக்கள் களமிறங்க காரணமே பணத்தால் மக்களை வீழ்த்திவிடலாம் என்பதுதான்.. ஓட்டுக்குப் பணம் வாங்கமாட்டோம் என சில மாதங்களுக்கு முன்னர் புரட்சி குரல் ஒலித்த தமிழ் மண்ணில் தலைகீழ் அவலம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது என்பது எவ்வளவு பெரிய கொடுமை.

இப்படியெல்லாம் வருமானம்
ஆர்கே நகர் தொகுதியில் படித்த, படிக்காத பெண்கள், தினகரன் பூத்தில் சென்று 3 மணிநேரம் அமர்ந்தால் போதும்... இன்றைக்கு 300 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அந்த 3 மணி நேரத்துக்கு பின்னர் வேற கட்சி கொடி பிடித்துப் போனால் எக்ஸ்ட்ரா வருமானம் கிடைத்துவிடுகிறது.

எக்ஸ்ட்ரா வசூல்
இவைதவிர மளிகை பில் செட்டில்மெண்ட், ஆன்லைன் ஷாப்பிங் என எக்ஸ்ட்ரா வரவுகளால் மகிழ்ச்சியில் திளைத்துப் போகிறது வாக்காள பெருங்குடிகள் கூட்டம். ஓட்டுக்குப் பணம் வாங்காதே என விழிப்புணர்வு பிரசாரம் செய்யப் போனால், கையில் வைத்திருப்பவர்கள் கொடுக்கிறார்கள்... வாங்குகிறோம்.. உங்களுக்கு என்ன ஆச்சு என ஏகத்துக்கும் எகிறத்தான் செய்கிறது திருவாளர் பொதுஜனம்.

காசுக்காக கையேந்தும் மக்கள்
இதைவிட வெட்கக் கேடானது... பிரசாரம் செய்ய வரும் வேட்பாளர்களிடம், அவங்க எல்லாம் அவ்வளவு பணம் கொடுத்தாங்களே.. நீங்க ஒன்னும் தரலையே என மானம்கெட்டத்தனமாக கையேந்துகிற பெருங்கொடுமையையும் பார்க்க முடிகிறது. என்னதான் நீங்கள் கரடியாக கத்தினாலும் நாங்கள் விலங்கினும் கீழோர்தான் என்கிற நிலையில்தான் வாக்காளர்கள் உள்ளனரே என்பது சமூக ஆர்வலர்களின் பெருங்கவலை.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications