ஓகி புயலை மத்திய, மாநில அரசுகள் கையாண்ட விதம் படுமோசம்- கொந்தளிக்கும் ஆர்கே நகர்!

ஓகி புயலை மத்திய- மாநில அரசுகள் கையாண்ட விதம் படுமோசம் என கொந்தளித்து போய் கூறியுள்ளனர் ஆர்.கே.நகர் வாக்காளர்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓகி புயலை மத்திய, மாநில அரசுகள் கையாண்ட விதம் படுமோசம் என ஆர்.கே.நகர் வாக்காளர்கள் கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளனர்.

ஆர்.கே.நகர் தேர்தல் கள நிலவரம் தொடர்பாக பேராசிரியர் ராஜநாயகம் குழு அங்கு கருத்து கணிப்பை நடத்தியது. பொதுவாக சுயேட்சை வேட்பாளர் தினகரனுக்கு ஆதரவு அதிகம் இருப்பதாக அந்த சர்வே முடிவு தெரிவிக்கிறது.

RK Nagr voters angry over Centre and state on Ockhi Issue

அதேபோல் மத்திய- மாநில அரசுகளின் செயல்பாடுகள் படுமோசமாக இருந்ததாகவும் ஆர்.கே.நகர் வாக்காளர்கள் பதிவு செய்திருந்தனர். குறிப்பாக ஓகி புயலை மத்திய, மாநில அரசுகள் கையாண்ட விதம் குறித்த கேள்விக்கு கொந்தளித்து போயிவிட்டனர் ஆ.கே.நகர் வாக்காளர்கள்.

ஆர்.கே.நகரைப் பொருத்தவரையில் ஓகி புயலை மத்திய, மாநில அரசுகள் கையாண்ட விதம் ஒருவருக்கும் நிறைவைத் தரவில்லை. இரு அரசுகளும் ஓகி புயலைக் கையாண்ட விதம் மோசம் என 93.5% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் சொல்லிக்கொள்ளும்படியாக ஓகி புயல் விவகாரத்தில் இரு அரசுகளும் எதுவும் செய்யவில்லை என 6.5% பேர் தெரிவித்துள்ளனர். ஓகி புயலில் மத்திய- மாநில அரசுகளின் செயல்பாடுகள் சிறப்பு என ஒருவர் கூட கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறி0ப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+