Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பருவமழை வந்துருச்சுங்கோ.. ஆர்ப்பரிக்கும் அலை.. பல அடி உயரத்துக்கு கொந்தளிக்கும் மன்னார் வளைகுடா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் மன்னார் வளைகுடா பகுதியில் கடல் பயங்கர கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் தொடங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு ஒரு வாரக்காலம் தாமதமாக தொடங்கும் என ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்தது.

ஆனால் அந்தமான் தீவுகளில் கடந்த வாரமே தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. இதனால் தெற்கு அந்தமானில் கடந்த ஒரு வாரமாக கனமழைபெய்து வருகிறது.

கேரளாவில் நாளை மறுநாள்

கேரளாவில் நாளை மறுநாள்

இந்நிலையில் தெற்கு அரபிக்கடலிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. ஆனால் கேரளாவில் நாளை மறுநாள்தான் பருவமழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிச்சயம் தொடங்கிவிடும்

நிச்சயம் தொடங்கிவிடும்

இருப்பினும் கேரள மாநிலத்தின் கடலோர பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மழைக்கான காற்றும் வீசி வருகிறது. பருவமழைக்கு சாதகமான சூழல் நிலவி வருவதால் நாளை இரவு அல்லது நாளை மறுநாள் நிச்சயம் தென் மேற்கு பருவமழை தொடங்கி விடும் என நம்பப்படுகிறது.

கொந்தளிக்கும் கடல்

கொந்தளிக்கும் கடல்

இந்நிலையில் பருவமழையை முன்னிட்டு மன்னார் வளைகுடா பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. அங்கு பல அடி உயரத்துக்கு எழும்பும் கடல் அலை மிரட்டும் வகையில் உள்ளது. பருவமழையை யொட்டியே கடல் இப்படி கொந்தளிப்புடன் காணப்படுவதாக கூறப்படுகிறது.

வைரலாகும் காட்சிகள்

கடல் அலைககள் அங்குள்ள தூண்டில் வளைவின் மீது பல அடி உயரத்துக்கு எழும்பி துடைத்து செல்கிறது. கடல் கொந்தளிக்கும் இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+