ஓசூரில் ரவுடி தலையை வெட்டி கொடூரமாக கொன்ற கும்பல் - போலீஸ் விசாரணை
ஓசூரில் ரவுடியை கடத்திச் சென்று தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர்: ஓசூரில் பிரபல ரவுடியும் ஹோட்டல் உரிமையாளருமான பிரேமை கத்தியால் குத்தி காரில் கடத்திச் சென்ற மர்ம கும்பல் அவரது தலையை துண்டித்து காட்டுக்குள் வீசி சென்றுள்ளது.
ஓசூர் சமத்துவ புரம் பகுதியில் வசித்து வந்தவர் சேட்டு(எ)பிரேம் நவாஸ்,40. இவர் ஓசூர் ராம்நகரில் தாஜ் உணவு விடுதி ஒன்றை நடத்தி வந்தார். இவர் பிரபல ரவுடியாவார். நேற்று காலை தன் வீட்டிலிருந்து உணவகத்துக்கு புறப்படும் போது காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை கடத்திச் சென்றது.

இது குறித்து சேட்டுவின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் ஹட்கோ போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஓசூரை அடுத்த நல்லஹான கொத்தனபள்ளி கிராமத்தை அடுத்த வனப்பகுதியில் வாலிபர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து சூளகிரி போலீஸார் அங்குச்சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தலைத்துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தது நேற்று காலையில் காரில் கடத்தப்பட்ட சேட்டு என தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டது.
காரில் சேட்டுவை கடத்திய கும்பல் அவரை தனியிடத்துக்கு கொண்டுச்சென்று காலை வெட்டி பின்னர் அவரது கைகளை கட்டி தலையை தனியாக துண்டித்து கொன்றுவிட்டு தலையை அவரது காலடியில் வீசிவிட்டு சென்றுள்ளது.
கொலை செய்யப்பட்ட சேட்டு 2008ஆம் ஆண்டு தேன்கனிக்கோட்டை ரியல் எஸ்டேட் அதிபர் வசந்தன் கொலை வழக்கிலும், கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த இரும்பு வியாபாரி முஸ்தாக் கொலையிலும் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இவைதவிர, சேட்டு மீது ஓசூர் காவல்நிலையத்தில் பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன.
போலீஸ் நடத்திய விசாரணையில் சேட்டுவிற்கும், பிரபல ரவுடி கோபிக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது தெரியவந்தது. இதனால் சேட்டுவை கடத்திச் சென்று ஓசூர் -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கோனேரிப்பள்ளி அடுத்துள்ள நல்லகாணகொத்தபள்ளி என்ற இடத்தில் சடலமாகக் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலைதுண்டிக்கப்பட்டு சேட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
சேட்டுவின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஓசூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஓசூரில் கொலைகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications