ரூ1.18 கோடி ஏடிஎம் வங்கிப் பணம் கொள்ளை... மேலும் ஒருவர் கோர்ட்டில் சரண்
தூத்துக்குடி: 1.18 கோடி ரூபாய் ஏடிஎம் வங்கிப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரணடைந்துள்ளார்.
சென்னை மதுரவாயல் சுடலைமாடன் கோயில் தெருவில் லாஜி கேஷ் எனும் பெயரில் வங்கி ஏடிஎம்களுக்கு பணப்பரிவர்த்தனை செய்யும் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார் இசக்கி பாண்டியன். இவர் கார்களில் பணத்தை கொண்டு சென்று ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்பும் நிறுவனத்தில் ஓட்டுநராக பணி செய்து வந்தார்.

இந்நிலையில், அக். 3ம் தேதி இந்நிறுவனத்துக்கு சொந்தமான காரில் சென்னையில் ரூ.2 கோடியே 30 லட்சத்தை எடுத்துக் கொண்டு 4 பேர் சென்றார். அப்போது, வேலப்பன்சாவடி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பேங்க் ஆப் பரோடா ஏடிஎம் மையத்தில் பணத்தை நிரப்பிக் கொண்டிருந்த போது, காரில் இருந்து 1.18 கோடியை எடுத்துக் கொண்டு இசக்கி பாண்டி ஓடிவிட்டார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போதே, ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் இசக்கி பாண்டியன் சரணடைந்தார். இதனிடையே, இசக்கி பாண்டியனின் மைத்துனர் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், அவர் பதுக்கி வைத்திருந்த 77 ஆயிரம் கோடி பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய வீரபாகு என்பவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஆனால், போலீசாரிடம் இருந்து தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து, வீரபாகுவைப் பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இன்று வீரபாகு ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரணடைந்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications