Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ1.18 கோடி ஏடிஎம் வங்கிப் பணம் கொள்ளை... மேலும் ஒருவர் கோர்ட்டில் சரண்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: 1.18 கோடி ரூபாய் ஏடிஎம் வங்கிப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரணடைந்துள்ளார்.

சென்னை மதுரவாயல் சுடலைமாடன் கோயில் தெருவில் லாஜி கேஷ் எனும் பெயரில் வங்கி ஏடிஎம்களுக்கு பணப்பரிவர்த்தனை செய்யும் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார் இசக்கி பாண்டியன். இவர் கார்களில் பணத்தை கொண்டு சென்று ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்பும் நிறுவனத்தில் ஓட்டுநராக பணி செய்து வந்தார்.

Rs. 1.18 cr ATM cash robbery case: one more surrenders before court

இந்நிலையில், அக். 3ம் தேதி இந்நிறுவனத்துக்கு சொந்தமான காரில் சென்னையில் ரூ.2 கோடியே 30 லட்சத்தை எடுத்துக் கொண்டு 4 பேர் சென்றார். அப்போது, வேலப்பன்சாவடி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பேங்க் ஆப் பரோடா ஏடிஎம் மையத்தில் பணத்தை நிரப்பிக் கொண்டிருந்த போது, காரில் இருந்து 1.18 கோடியை எடுத்துக் கொண்டு இசக்கி பாண்டி ஓடிவிட்டார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போதே, ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் இசக்கி பாண்டியன் சரணடைந்தார். இதனிடையே, இசக்கி பாண்டியனின் மைத்துனர் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், அவர் பதுக்கி வைத்திருந்த 77 ஆயிரம் கோடி பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய வீரபாகு என்பவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஆனால், போலீசாரிடம் இருந்து தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து, வீரபாகுவைப் பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இன்று வீரபாகு ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரணடைந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+