புதுக்கோட்டை அருகே மூட்டை மூட்டையாய் ரூ.18 கோடி நட்சத்திர ஆமைகள்.. 3 பேர் கைது
18 கோடி ரூபாய் மதிப்புள்ள நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 18 கோடி ருபாய் மதிப்புடைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அது சம்பந்தமாக 3 பேரையும், மத்திய வருவாய் புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை வழியாக நட்சத்திர ஆமைகள் கடத்தப்பட்டு வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி, அவர்கள் திருச்சி புதுக்கோட்டை சாலையில் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று நிற்காமல் சென்றது.

இதனால் வருவாய் புலனாய்வுத்துறை போலீசார் அந்த காரை துரத்தி சென்றனர். அந்த கார் புதுக்கோட்டை சிப்காட் அருகேயுள்ள ரெங்கம்மாசந்திரம் அருகே உள்ள ஒரு குடோனில் சென்று நின்றது. இதனையடுத்து காரில் இருந்த 3 பேரிடம் விசாரணை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் பதில் அளிக்கவே அவர்களது காரையும் குடோனையும் சோதனை செய்தனர்.
அதில் கூடை கூடையாக நட்சத்திர ஆமை இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த அமீன், புரோகான், சையது ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சர்வதேச அளவில் பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளின் மதிப்பு 18 கோடி ருபாய் என்று போலீசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications