ரூ. 2000ஐ அறிமுகம் செய்ததால் கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை பாதிக்கும் - ஒன் இந்தியா சர்வே
1000 ரூபாயை ஒழித்து விட்டு 2000 ரூபாயை அறிமுகப்படுத்துவது கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையை பாழாக்கும் என்று ஒன் இந்தியா வாசகர்கள் கூறியுள்ளனர்.
சென்னை: கறுப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாயை திரும்ப பெறுவதாக அறிவித்தது. திடீரென்று மத்திய அரசு அறிவித்தது மக்களை கடும் சிரமத்திற்கு ஆளாக்கியது. உயர்மதிப்பு உள்ள பணத்தினால்தான் கறுப்பு பணம் அதிகரிப்பதாக கூறிய மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட்டது.
சில்லறை தட்டுப்பாடு ஒரு பக்கம் உள்ள நிலையில் 2000 ரூபாய் நோட்டை சில்லறை மாற்ற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசின் அறிவிப்பு குறித்து ஒன் இந்தியா நடத்திய சர்வேயில் பல்வேறு விதமான பதில்களை மக்கள் அளித்துள்ளனர்.

2000 ரூபாய் நோட்டு கறுப்பு பணத்தை ஒழிக்க 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்து விட்டு 2000 ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட்டுள்ளது கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையை பாழக்குமே என்று கேட்டதற்கு 51.7% பேர் அதாவது 13,417 பேர் ஆம் என்று கூறியுள்ளனர்.
2000 ரூபாய் நோட்டுக்களால் கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை பாழாகாது என்று 48.3% சதவிகிதம் பேர் அதாவது 10,905 பேர் நமது ஒன் இந்தியா நடத்திய சர்வேயில் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications