ஜெ.வின் வேதா இல்லத்தை நினைவிடமாக்க ரூ 20 கோடி ஒதுக்கீடு
சென்னை: வேதா இல்லத்தை நினைவிடமாக்குவதற்காக ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
2018-19-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பட்ஜெட்டை ஓபிஎஸ் வாசித்து வருகிறார்.

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக்குவதற்காக ரூ 20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ரூ. 50.80 கோடியில் மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்படவுள்ளது.
100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படுகிறது. பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.27 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கு ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் சுயவேலைவாய்ப்பு நிதி ரூ25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மகளிர் சுகாதார திட்டத்தின் கீழ் சானிட்டரி நாப்கின்களுக்கு ரூ.60.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications