Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மழையையும் பொருட்படுத்தாமல் மதுவில் நீந்திய ‘குடி’மகன்கள்... தீபாவளி பண்டிகைக்கு ரூ. 372 கோடி விற்பனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தாண்டு தீபாவளிப் பண்டிகைக்கு டாஸ்மாக்கில் ரூ. 372 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது அரசின் இலக்கையும் தாண்டி குடித்துத் தீர்த்துள்ளது தமிழகம்.

தமிழகத்தில் பரவலாக தீபாவளிக் கொண்டாட்டங்கள் களை கட்டினாலும், சில இடங்களில் வழக்கத்தை விட இந்தாண்டு தீபாவளி சற்று அமைதியாகவே வந்து சென்றது. காரணம் மழை. தீபாவளிக்கு சில தினங்கள் முன்னரே தமிழகத்தில் கனமழை பெய்யத் தொடங்கி விட்டது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. பட்டாசு வெடிக்க இயலாத நிலை ஏற்பட்டது.

ஆனால், அடாது மழை பெய்தாலும் விடாது தங்களது கடமையை செவ்வணே செய்துள்ளார்கள் ‘குடி'மகன்கள். கடந்த ஆண்டை விட இந்தாண்டு ரூ. 68 கோடி அதிகமாக மது விற்பனையாகி இருப்பதே இதற்கு நல்ல சாட்சி.

டாஸ்மாக்...

டாஸ்மாக்...

தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரத்து 826 டாஸ்மாக் கடைகளும், 3 ஆயிரத்து 838 பார்களும் உள்ளன. சென்னையில் மட்டும் சுமார் 500 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.

மது விற்பனை...

மது விற்பனை...

கடை ஒன்றிற்கு ரூ. 70 கோடி என தினமும் மது விற்பனை செய்யப்படுகிறது. இதுவே விடுமுறை நாட்களென்றால் நாளொன்றிற்கு ரூ. 92 கோடி என்ற அளவில் சராசரியாக மது விற்பனை நடைபெறுகிறது.

பண்டிகை நாட்களில் கூடுதல்...

பண்டிகை நாட்களில் கூடுதல்...

பண்டிகை நாட்களென்றால் சொல்லவே வேண்டாம். குடிமகன்கள் குஷியாகி டாஸ்மாக்கிற்கு இன்னும் வருமானத்தை அதிகமாக்கி விடுவார்கள்.

விலை உயர்வு...

விலை உயர்வு...

இந்நிலையில், சமீபத்தில் மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வு வரி உயர்த்தப்பட்டது. இதனால் மது விலை அதிகரித்தது. சாதாரண மற்றும் நடுத்தர மதுபானங்கள் விலை 12.5 சதவீதமும், உயர்ரக மதுபானங்கள் விலை 22.5 சதவீதமும் விலை உயர்த்தப்பட்டது. இதனால், அரசுக்கு கூடுதலாக ரூ.2,500 கோடி வரை வருவாய் அதிகரித்து கிடைத்து வருகிறது.

3 நாட்களில்...

3 நாட்களில்...

இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கடந்த 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 3 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் சுமார் ரூ.372 கோடி அளவுக்கு மது வகைகள் விற்பனையாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இலக்கு...

இலக்கு...

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது ரூ.304 கோடிக்கு மதுபான வகைகள் விற்பனையாகின. எனவே, இந்தாண்டு ரூ. 370 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருந்தது.

ரூ. 372 கோடி...

ரூ. 372 கோடி...

அதன்படி, கடந்த 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ரூ.113 கோடியும், 9-ந் தேதி(திங்கட்கிழமை) ரூ.108 கோடியும், 10-ந் தேதி (தீபாவளி பண்டிகையன்று)ரூ.151 கோடியும் என மொத்தம் ரூ.372 கோடிக்கு மது வகைகள் விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலக்கை தாண்டியது...

இலக்கை தாண்டியது...

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.68 கோடி அதிக விற்பனை ஆகும். நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி வருமானம் ஈட்டித் தந்துள்ளனர். ‘குடி'மகன்கள்.

பிராந்திக்கே மவுசு...

பிராந்திக்கே மவுசு...

வழக்கம்போல் இந்தாண்டும் பிராந்தி மதுவகைகளே அதிகம் விற்பனை ஆகியுள்ளது. மழை காரணமாக பீர் வகைகளுக்கு மவுசு குறைந்ததால், கடந்த ஆண்டை விட பீர் விற்பனை 10 சதவீதம் சரிவடைந்துள்ளது.

எலைட்டிலும் கூட்டம்...

எலைட்டிலும் கூட்டம்...

‘டாஸ்மாக்' மது கடைகளை போலவே ‘எலைட்', தனியார் மதுபான பார்களிலும் மது பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+