திருச்சி விமான நிலையத்தில் ரூ.8.44 லட்சம் மதிப்புள்ள சவுதி ரியால் பறிமுதல்.. ஒருவர் கைது
ரூ.8.44 லட்சம் மதிப்புள்ள சவுதி ரியால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் ரூ.8.44 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தின் விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடமும், இங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளிடமும் அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.

அதன்படி, திருச்சியிலிருந்து கோலாலம்பூருக்கு செல்லவிருக்கும் பயணிகளை சுங்கத்துறை அகிர்கள் சோதனை நடத்தினர். அப்போது, சென்னையை சேர்ந்த நசீர்கான் என்பவர் சவுதி அரேபியா நாட்டின் கரன்சி நோட்டுகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. ரியால் எனப்படும் அந்த பணத்தாள் கட்டுக்களுக்களை கொண்டு செல்ல முறையான அனுமதியும் அவர் பெறப்படவில்லை என தெரிகிறது.
மேலும் நசீர்கான் முன்னுக்குப் பின் முரணாகவும் விசாரணையின்போது பதிலளித்தார். இதனால் அவற்றினை அந்த நோட்டுக்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அனுமதியின்றி கரன்சி நோட்டுக்களை மறைத்து சென்றது தொடர்பாக நசீர்கானிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட அந்த பணத்தாள்களின் இந்திய மதிப்பு ரூ.8.44 லட்சம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications