துப்பாக்கி முனையில் மன்னார்குடி வங்கியில் ரூ.8 லட்சம் கொள்ளை: 4 பேர் கைவரிசை
மன்னார்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்கென்டைல் வங்கியில் ரூ. 8 லட்சத்தை துப்பாக்கி முனையில் கொள்ளை நடந்தது.
Recommended Video

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்கென்டைல் வங்கியில் ரூ. 8 லட்சத்தை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்குடியில் தமிழ்நாடு மெர்கென்டைல் வங்கி உள்ளது. இங்கு அப்பகுதி மக்கள் நகைகளை அடகுவைப்பது, தினந்தோறும் பண பரிமாற்றம் செய்வது என நடப்பது வழக்கம்.

இந்த வங்கியில் மதியம் நேரத்தில் வாடிக்கையாளர்கள் குறைவாக இருந்த நேரத்தில் அங்கு 4 பேர் கொண்ட கும்பல் வங்கிக்குள் நுழைந்தனர். அப்போது வங்கி மேலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட வங்கி ஊழியர்களை துப்பாக்கி காட்டி மிரட்டி தாக்கினர்.
இதையடுத்து அங்கிருந்த 10 பவுன் நகை உள்பட ரூ. 8 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர். பிறகு அங்கிருந்து கண்காணிப்பு கேமராக்களையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர்.
இதையடுத்து தகவலறிந்த மன்னார்குடி போலீஸார் சம்பவம் இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். வங்கியை சுற்றியுள்ள இடங்களில் சிசிடிவி கேமராக்கள் உள்ளனவா என்றும் ஆராய்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications