For Quick Alerts
For Daily Alerts
Just In
திருச்செந்தூர்: சரத்குமார் காரில் இருந்து கணக்கில் வராத ரூ. 9 லட்சம் பணம் பறிமுதல்!
தூத்துக்குடி: திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் காரில் ரூ.9 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த நல்லூரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் வள்ளிக்கண்ணு தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் காரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணமின்றி 9 லட்சம் ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவையனைத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை திருச்செந்தூர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
sarathkumar money seize tamilnadu assembly election 2016 சரத்குமார் பறக்கும் படை பணம் பறிமுதல் தமிழக சட்டசபை தேர்தல் 2016
English summary
The flying squad team seized Rs. 9 lakh during from Sarathkumar's vehicle check at under the Tiruchendur constituency limits.