ஏற்காடு இடைத் தேர்தல்: 7,000 விவசாயிகள் ‘நோட்டா’வைப் பயன்படுத்த முடிவு
சேலம்: ஏற்காடு இடைத்தேர்தலில் நோட்டா ஓட்டினைப் பயன்படுத்த 7000 விவசாயிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு கடந்த பத்து ஆண்டுகளாக நாடு முழுவதும், நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டது. அப்பணிக்காக நிலம் கொடுக்கும் பொதுமக்களுக்குரிய இழப்பீட்டை, அந்தந்த மாநில அரசு சரிபார்த்து வழங்க வேண்டும் என தெரிவித்தது.
என்.ஹெச்.68 என்றழைக்கப்படும், சேலம் - உளுந்தூர் பேட்டை தேசிய நெடுஞ்சாலைப்பணி, 136 கி.மீ., தூரம் நடந்ததுள்ளது. இதற்காக, விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என, 5,000க்கும் மேற்பட்டோரிடம், நிலம், வீடுகளை மத்திய அரசு சுவாதீனம் செய்தது. அதற்கான உரிய இழப்பீட்டை வழங்காமல் இழுத்தடித்ததால், நிலத்தை கொடுத்தோர் அரசு மீது அதிருப்திக்குள்ளாகினர்.
இது தொடர்பாக, உயர்நீதிமன்றத்திலும் அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். நெடுஞ்சாலை என்.ஹெச்.68ல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நலச்சங்கத்தினர், தங்களுக்குரிய இழப்பீடை கேட்டு போராடி வருகின்றனர். இதில், ஏற்காடு தொகுதிக்கு உட்பட்டு, 1,000 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.
தமிழக முதல்வர், தேசிய நெடுஞ்சாலை பணிக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தேர்தலில் ஓட்டு போடாமல் புறக்கணிப்போம் என செவ்வாய்கிழமையன்று, வாழப்பாடி பகுதியில், வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரம் வினியோகித்தனர். தகவல் அறிந்து வந்த வாழப்பாடி போலீஸார், அவர்களை கைது செய்து, வாழப்பாடியார் திருமண மண்டபத் தில் தங்க வைத்தனர்.
தொடர்ந்து, போலீஸ் அதிகாரிகள் அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், முதல்வரிடம் நாங்கள் எங்களுடைய கோரிக்கையை கூற வேண்டும். அதற்கு எங்களுக்கு அனுமதி பெற்றுத்தரவேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
அவர்களிடம் பேசிய போலீசார், அமைச்சர் இடைப்பாடி பழனிசாமியிடம் முறையிடுங்கள், அவர் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பார் என, போலீஸ் அதிகாரிகள் கூறினர். செவ்வாய்கிழமை மாலை, 4 மணியளவில், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி வீட்டுக்கு, சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் பழனிசாமி, பொருளாளர் சின்னதுரை உள்ளிட்ட, பத்து நிர்வாகிகள் வந்தனர். இரண்டு மணி நேர தாமதத்துக்கு பின், அவர்களை அமைச்சர் சந்தித்து பேசினார்.
அப்போது, நான் தேர்தல் பணியில் இருக்கிறேன். எனக்கு இந்த பிரச்னை பற்றி தெரியாது, முதல்வரை சந்திக்க அப்பாயின்மென்ட் வாங்கி கொடுப்பது, அமைச்சர் பன்னீர்செல்வம் தான், அவர் வெள்ளாளகுண்டம் பகுதியில் உள்ளார், அவரைச் சென்று பாருங்கள் என, கூறியுள்ளார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நிலம் கொடுத்தோர் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: அமைச்சரிடம் வந்தால், எங்களுடைய கோரிக்கையையும், முதல்வரை சந்திக்கவும் வாய்ப்பு கிடைக்கும். தேர்தலில் ஆதரவு கொடுக்கலாம் என, நினைத்தோம்.
ஆனால், எனக்கு தெரியாது, பன்னீர்செல்வத்தை போய் பாருங்கள் என, கூறுகிறார். எங்களிடம், 7,000 ஓட்டு உள்ளது, அவற்றை நாங்கள் புறக்கணிப்போம் என, கூறியபோது அது உங்கள் இஷ்டம் என, கூறினார்.
நிலத்தை கொடுத்து விட்டு, இழப்பீடை பெற முடியாமல் தவிக்கிறோம். பாதிக்கப்பட்ட விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என, 7,000 ஓட்டு, எங்கள் வசம் உள்ளது, நடக்க உள்ள ஏற்காடு தேர்தலை நாங்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் மட்டும் 10,267 பேர் 49ஓ வை பயன்படுத்தியிருந்தனர்.
ஏற்காடு இடைத்தேர்தலில் ஏராளமானோர் நோட்டா ஓட்டினைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளதால் அதிமுக, திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications