மைல் கற்களில் தமிழில் எழுதினாலும் அதே அளவு தார்தான் தேவைப்படும்.. இது எஸ்.வி.சேகர் கருத்து
சென்னை: மைல் கற்களில் இந்தியை அழிப்பதற்கு பதில் தமிழிலும் எழுதினாலும் அதே அளவு தார்தான் தேவைப்படும் என்று நடிகர் எஸ்.வி.சேகர் டிவிட்டரில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளின் மைல் கற்களில் ஆங்கிலம் அழிக்கப்பட்டு இந்தியில் எழுதப்பட்டு வருவதாக திமுக, பாமக, மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தன.
மேலும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தனது டுவிட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் தானே பேசும் ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டு கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து நடிகரும், இயக்குநருமான எஸ்.வி.சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில், ''மைல்கற்களில் இந்தியை அழிப்பதற்கு பதில் தமிழிலும் எழுதினாலும் அதே அளவு தார்தான் தேவைப்படும். ஆக்கபூர்வமாக பயன்படுத்துங்கள்'' என்று கூறியுள்ளார்.
மைல்கற்களில் ஹிந்தியை அழிப்பதற்கு பதில் தமிழிலும் எழுதினாலும் அதே அளவு தார்தான் தேவைப்படும். Be Constructive 👍
— S.VE.SHEKHER (@SVESHEKHER) May 4, 2017
நடிகர் எஸ்.வி.சேகர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.