நேபாளம் நிலநடுக்கம்: நடிகர் எஸ்.வி.சேகர் ரூ.5,00,000 நிவாரண நிதி
Subscribe to Oneindia Tamil
நேபாளத்தில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,00,000 நிவாரண நிதி அளித்துள்ளார் முன்னாள் எம்.எல்.ஏவும் தணிக்கை குழு உறுப்பினருமான எஸ்.வி.சேகர்.
கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். இவர்களுக்கு இந்திய உதவி செய்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பிரதமர் பொது நிவாரண நிதிக்கு பணமாகவோ, பொருளாகவோ அளித்து வருகின்றனர்.

நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, எஸ் வி சேகர் தன்னுடைய 'யாமிருக்க பயம் ஏன்' நாடகத்தின் மூலமாக ஸ்ரீ சுகர் பொது தொண்டு நிறுவனம்,மற்றும் நாடகப்பிரியா டிரஸ்ட் மூலமாக 5,00,000/- ரூபாய் நிதி திரட்டி, பிரதமர் பொது நிவாரண நிதிக்கு டெல்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாயா அவர்களிடம் வழங்கினார்.













Click it and Unblock the Notifications