கிரானைட் முறைகேடு: சகாயம் அலுவலகத்தில் திரும்பியிருந்த கண்காணிப்பு கேமரா.. திருப்பியது யார்?
மதுரை: மதுரை கிரானைட் முறைகேடு வழக்கில் தன்னுடைய கிடுக்கிப்பிடி விசாரணையை சகாயம் துவங்கியுள்ள நிலையில் அவருடைய தனி அலுவலகத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமராவை யாரோ ஒருவர் திருப்பி வைத்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு மனு, விசாரணைக்கு முட்டுக்கட்டை போன்ற பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டி நீதிமன்ற உத்தரவின் பேரில் கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணையைத் துவங்கி உள்ளார் சிறப்பு விசாரணை அதிகாரியான சகாயம் ஐ.ஏ.எஸ்.

மதுரை வந்துள்ள சகாயம், தனது குழுவினருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். விசாரணையை நடத்துவது குறித்து அவர்களுடன் விவாதித்தார். இந்த நிலையில் சகாயத்தின் அலுவலகத்தில் நடந்த ஒரு விஷயம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பூமாலை வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சகாயத்தின் கிரானைட் முறைகேடு விசாரணை அலுவலகத்தில் வருபவர்களையும், அதிகாரிகள் விசாரணையையும் கண்காணிக்க கேமரா ஒன்று பொருத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த அதிகாரிகளில் யாரோ ஒருவர் நேற்று அக்கேமராவின் பார்வையினை வேறு பக்கமாக திருப்பி விட்டிருக்கின்றார். இச்சம்பவம் விசாரணை அதிகாரிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கேமராவை வேறு பக்கமாக திருப்பி விட்ட அந்த அதிகாரி யார் என்ற சலசலப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications