3வது கட்ட விசாரணையை துவக்கினார் சகாயம்... என்னென்ன பூதங்கள் வெளிவரப் போகிறதோ!
மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பான மூன்றாவது கட்ட விசாரணையை இன்று தொடங்கியுள்ளது சகாயம் விசாரணைக் குழு.
மதுரை அருகே மேலூர், கீழவளவு உள்பட பல பகுதிகளில் முறைகேடாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதில் அரசுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக பி.ஆர்.பி. நிறுவனம் உள்பட பல நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் பலர் கைதானார்கள்.

இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்துவதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயம் தலைமையில் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன்படி, கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் ஹைகோர்ட் உத்தரவிட்டது.
தனது முதல் கட்ட விசாரணையை கடந்த 3-ந்தேதி சகாயம் தொடங்கி, 3 நாட்கள் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களைப் பெற்றார். அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் பலர் கிரானைட் அதிபர்கள் தங்களை மிரட்டி நிலங்களைப் பறித்ததாகவும், இதனால் விவசாயத் தொழிலை இழந்து வாடுவதாகவும் மக்கள் கண்ணீருடன் புகார் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து 2-வது கட்ட விசாரணையை சகாயம் கடந்த 15-ந்தேதி தொடங்கினார். 5 நாட்கள் நடத்தப்பட்ட இந்த விசாரணையில் பொதுமக்கள் மட்டும் அல்லாமல், போலீஸ்காரர்களும் புகார்கள் தெரிவித்தனர். மேலும், கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார்களால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து கிரானைட் வெட்டி எடுக்கப்பட்ட பகுதிகளுக்கு சகாயம் தனது குழுவினருடன் சென்று விசாரணை நடத்தினார். மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி இருந்து விசாரணை நடத்தி வந்த சகாயத்திற்கு கொலை மிரட்டல் வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை மிரட்டலை தொடர்ந்து சகாயத்துக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேலும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் ஹைகோர்ட்டில் விசாரணைக் குழு மேலும் கால அவகாசம் கேட்கப்பட்டது. அதன்படி, தொடர்ந்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய 8 வார கால அவகாசம் வழங்கிய ஹைகோர்ட் உத்தரவிட்டது.
இதனடிப்படையில், இன்று தனது 3வது கட்ட விசாரணையை சகாயம் தொடங்கியுள்ளார். இதில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications