கிரானைட் முறைகேடு: இறுதிக் கட்ட விசாரணையில் சகாயம்.. 10 நாளில் அறிக்கையை ரெடி செய்கிறார்
மதுரை: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கிரானைட் முறைகேடு குறித்த இறுதி கட்ட ஆய்வை இன்று தொடங்க உள்ளார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகளால் அரசுக்கு ரூபாய் 16 ஆயிரம் கோடி அளவில் இழப்பு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி இதுவரை 165 வழக்குகள் பதிவு செய்துள்ளது. இதில் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்துக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டது.
இதன்பேரில் கடந்த டிசம்பர் மாதம் விசாரணையை தொடங்கிய சகாயம், தற்போது வரை 13 கட்டமாக விசாரணையை முடித்துள்ளார்.
1994 முதல் 2012ம் ஆண்டு வரை, குவாரிகளுக்காக அரசு நிலம் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் சகாயம் விசாரணைகள் நடத்தினார்.
அரசுத்துறைகள் வழங்கிய ஆவணங்களை சப்-கலெக்டர்கள், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்யும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. கடந்த 6 மாதத்தில் சகாயம் இந்த ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்து அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
கிரானைட் குவாரிகள் மீது அரசு எடுத்த நடவடிக்கை போதுமானதா என்பதே ஹைகோர்ட்டின் கட்டளை. ஆனால் அதைவிட கூடுதலாக கிரானைட் குவாரியால் அந்தப்பகுயில் எந்த வகையான இயற்கை வளம் பாதிப்பு மற்றும் அழிப்பு, அதில் அரசு அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்பதையும் சகாயம் அறிக்கையில் தெரிவிப்பார்.
இந்த நிலையில் விசாரணையின் இறுதிக்கட்டத்தை நெருங்கும் சகாயம் தனது 14வது கட்ட ஆய்வுப்பணியை இன்று தொடங்க உள்ளார். இன்னும் 10 நாளில் அவர் பணியை முடித்து அறிக்கையை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications