For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடிகர் ஜெய் தலைமறைவு: கைது செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் ஜெய்யை 2 நாட்களுக்குள் கைது செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகர் ஜெய்யை 2 நாட்களுக்குள் கைது செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை 28, எங்கேயும் எப்போதும், சுப்பிரமணியபுரம், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகர் ஜெய். இவர் கடந்த செப்டம் 21ஆம் தேதி அதிகாலை குடிபோதையில் தனது ஆடி காரை ஓட்டிச் சென்றார்.

Saidapettai court orders to arrest Actor Jai within two days

அளவுக்கு அதிகமாக மதுக்குடித்திருந்த அவர், கட்டுப்பாட்டை இழந்து அடையாறு பாலத்தின் தடுப்புச்சுவரில் காரை மோதினார். இந்த விபத்தில் அதிர்ஷடவசமாக அவர் உயிர் தப்பினார்.

இதுதொடர்பான வழக்கில் நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று முன்னிலையாக வேண்டும். ஆனால் நேற்று முன்னிலையாகததால் சைதாப்பேட்டை நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது.

ஆனால் இன்றும் நடிகர் ஜெய் முன்னிலையாகவில்லை. அவர் தலைமறைவாகிவிட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்த 2 நாட்களுக்குள் நடிகர் ஜெய்யை கைது செய்து ஆஜர்படுத்த சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நடிகர் ஜெய் தொடர்பான வழக்கு அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

English summary
Saidapettai court orders to arrest Actor Jai within two days. Actor Jai car met with an accident in chennai Adayar bridge on September 21st early morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X