அதிரடி காட்டும் கலெக்டர்.. இன்று மட்டும் ரூ.30 லட்சம் அபராதம் விதிப்பு
சேலத்தில் கொசு உற்பத்தி செய்த தனியார் கல்லூரிக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சேலம்: அம்மாப்பேட்டையில் கொசு உற்பத்தி செய்த தனியார் கல்லூரிக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டெங்கு அதிகம் பாதித்துள்ள மாவட்டங்களில் ஒன்றான சேலத்தில் மாவட்ட ஆட்சியர் ரோகினி ஆய்வு செய்தார். டெங்கு பாதித்துள்ள பகுதிகளில் உள்ள கடைகள் கல்வி நிறுவனங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கொசு வளரும் வாய்ப்புள்ள வகையில், சுற்றுப்புறத்தை வைத்திருந்த எல்.ஆர்.என் பஸ் நிறுவனத்திற்கு ரூ.15 லட்சம் அபராதம் விதித்தார் இதைத்தொடர்ந்து பல பகுதிகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் ரெய்டு நடத்தினார்.
அப்போது சேலம் அம்மாப்பேட்டையில் இயங்கி வரும் சக்தி கைலாஸ் தனியார் கல்லூரிக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை வைத்திருந்ததால் கல்லூரி நிர்வாகத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் களரம்பட்டியில் உள்ள ஏஆர்கே காம்ப்ளக்ஸ்க்கு 5 லட்சம் ரூபாயும் சேலம் புறநகர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள தனியார் ஹோட்டலுக்கு 5 லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது. இன்று ஒரே நாளில் மட்டும் 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications