காவிரி ஆற்றில் யாரும் இறங்கவோ அல்லது குளிக்கவோ கூடாது- ஆட்சியர் ரோகிணி எச்சரிக்கை
காவிரி ஆற்றில் யாரும் இறங்கவோ அல்லது குளிக்கவோ கூடாது என்று ஆட்சியர் ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலம்: காவிரி ஆற்றில் யாரும் இறங்கவோ அல்லது குளிக்கவோ கூடாது என்று ஆட்சியர் ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகத்தில் கனமழை கொட்டியதால் கேஆர்எஸ் அணை நிரம்பியது. இதையடுத்து கபினி அணைக்கு நீர் திறந்துவிடப்பட்டது.
பின்னர் கபிணி அணையிலிருந்து மேட்டூருக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து மேட்டூர் அணை 117 அடியை எட்டியுள்ளது. இன்றைய தினம் முழு கொள்ளளவை எட்டும் என தெரிகிறது.

கல்லணைக்கு வருகை
இதனால் கடந்த 19-ஆம் தேதி முதல் மேட்டூரில் இருந்து விவசாயத்துக்கு நீர் திறந்துவிடப்பட்டது. தண்ணீர் வரத்து காரணமாக கல்லணைக்கும் நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் காவிரி நீர் பாய்ந்து வருகிறது.

4 பேர் சடலம்
இந்நிலையில் ரெட்டியூரில் உள்ள காவிரி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கிய 6 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இவர்களில் ஒருவரை மட்டும் உயிருடன் மீட்டனர். இதையடுத்து 5 பேரில் 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

இறங்கவோ கூடாது
மீட்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக ரெட்டியூருக்கு சேலம் ஆட்சியர் ரோகிணி வருகை தந்தார். அப்போது அவர் கூறுகையில் காவிரி ஆற்றில் யாரும் இறங்கவோ குளிக்கவோ கூடாது.

வெள்ள அபாய எச்சரிக்கை
காவிரி ஆற்றின் அருகே நின்று செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுக்கக் கூடாது.
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலையில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலவச தொலைபேசி எண்
அணையிலிருந்து தற்போது 20,000 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இரவு 8 மணியளவில் இது 30,000 ஆயிரம் கனஅடியாக உயரும். எனவே கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வெள்ள அபாயம் தொடர்பான உதவிக்கு 1077 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார் ரோகிணி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications