குளித்துக் கொண்டிருந்த மைத்துனியை படம் பிடித்து ஆசைக்கு இணங்குமாறு மிரட்டிய இளைஞர் கைது

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில், தனது மைத்துனி குளித்துக் கொண்டிருந்தபோது அதை ரகசியமாக வீடியோவில் படம் பிடித்து வைத்து அதைக் காட்டி தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டிய இளைஞரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண் தனது சகோதரியின் வீட்டுக்கு வந்துள்ளார். அந்த வீட்டில், வீட்டுக்கு வெளியே பாத்ரூம் உள்ளது. அது ஓலையால் வேயப்பட்ட பாத்ரூம் ஆகும். சரியான சுற்றுச் சுவர் கூட கிடையாது. முழுக்க குடிசையால் ஆனது.

Salem: Man clicks pics of a bathing woman, demands sexual relations

அந்த பாத்ரூமில் இப்பெண் குளித்துக் கொண்டிருந்தபோது அவரது அக்காள் கணவர் ரகசியமாக தனது செல்போனில் வீடியோப் படமாக்கி விட்டார். பின்னர் தனது மைத்துனியை அழைத்து இந்த வீடியோவைக் காட்டியுள்ளார். அதைப் பார்த்து மைத்துனி அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து எனது ஆசைக்கு இணங்கினால் இதை வெளியே காட்ட மாட்டேன். இல்லாவிட்டால் எல்லோரிடமும் பரப்பி விட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மைத்துனி தனது கணவரிடம் இதுகுறித்துப் புகார் தர அவர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து மிரட்டல் விடுத்த நபரைப் போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+