சேலத்தில் கமிஷன் பெற்று கொண்டு 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்தவர் கைது
சேலத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுக்க 20 சதவீதம் கமிஷன் பெற்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம்: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால், தங்களிடம் உள்ள அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நேற்று வங்கிகள் விடுமுறை விடப்பட்டதால் இதனை பயன்படுத்தி கமிஷன் அடிப்படையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றித் தரும் திடீர் வியாபாரம் துவங்கியது.

சேலத்தில் பொதுத்துறை வங்கியின் அருகிலேயே 500 ரூபாய்க்கு 100 ரூபாய், 1000 ரூபாய்க்கு 200 ரூபாய் என்ற கமிஷன் அடிப்படையில் நோட்டுகளை மாற்றிக் கொடுத்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரது கூட்டாளிகள் இருவரை தேடி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் கமிஷன் பெற்றுக் கொண்டு 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் செயல்கள் அரங்கேறி வருகின்றன. சில இடங்களில் 1000 ரூபாய்க்கு 400 ரூபாய் கமிஷனாக எடுத்துக் கொண்டனர். இன்று வங்கிகளில் கூட்டம் அலைமோதுவதால் இன்றும் பலரும் கமிஷன் முறையில் பணத்தை மாற்றி கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி உள்ளிட்ட இடங்களில் 100 ரூபாய் நோட்டுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை பயன்படுத்தி, 500 ரூபாய் நோட்டுடன் வரும் மக்களிடம் அத்தியாவசிய பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. இதனால் 250 ரூபாய் மதிப்புள்ள காய்கறிகளை 500 ரூபாய் நோட்டு கொடுத்து வாங்கியதாக பெண்கள் தெரிவித்தனர்.
சென்னையில் ஒரு நபர் 500 ரூபாயை ஒருவரின் கையில் கொடுத்து அவரிடம் இருந்த 180 ரூபாயை மட்டுமே பெற்றுச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பணப்புழக்கம் இல்லாத காரணத்தால் இன்றும் பெரும்பாலான ஹோட்டல்கள்,கடைகள் பொதுமக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications