அடிச்ச அதிகாரிக்கு பதவி உயர்வா... வெகுண்ட சாமளாபுர மக்கள் மறியல் போராட்டம்
டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்ணை ஓங்கி அறைந்த அதிகாரிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதைக் கண்டித்து சாமளாபுர மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: சாமளாபுரம் பகுதியில் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கோரி பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த திருப்பூர் ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் தலைமையிலான போலீசார் போராட்டத்தை நடத்தக் கூடாது என்றும் கலைந்து செல்லுங்கள் என்றும் கூறினார்கள். இதனை சற்றும் ஏற்றுக்கொள்ளாத பெண்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது தடியடி நடத்தியது. அதுமட்டுமல்லாமல், அய்யம் பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணை ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் ஓங்கி அறைந்தார். அதில் அந்த பெண்ணுக்கு காது கேட்கும் திறன் பறிபோனது. இந்த சம்பவம் சமூக வலை தளங்களிலும் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரி வந்த நிலையில் தமிழக அரசு அவருக்கு பதவி உயர்வு கொடுத்து அழகு பார்த்துள்ளது. ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன், ஈரோடு மாவட்ட அதிரடிப்படை போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றார்.
தமிழக அரசின் இந்த பதவி உயர்வு அறிவிப்பு சாமளாபுர மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதனைக் கண்டிக்கும் வகையில், சாமளாபுரம் பேரூராட்சி பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது, தடியடி சம்பவத்தின் போது பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், மேலும் ஈஸ்வரி கன்னத்தில் அறைந்த ஏ.டி.எஸ்.பி. பாண்டிய ராஜனின் பதவி உயர்வை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடந்தினர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications