வெளியே வந்தது பாகனை மிதித்து கொன்ற சமயபுரம் கோவில் மசினி யானை
சமயபுரம் கோவில் மசினி யானை தனியார் யானை உதவியுடன் வெளியே கொண்டுவரப்பட்டது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: சமயபுரம் கோவில் யானை மசினி தனியார் யானை உதவியுடன் வெளியே கொண்டுவரப்பட்டது.
சமயபுரம் கோவில் யானை மசினிக்கு இன்று காலை மதம் பிடித்து பாகன் கஜேந்திரனை கொன்றது. இதைத்தொடர்ந்து கோவில் நடை மூடப்பட்டது.
இதையடுத்து வனத்துறை உதவியுடன் யானை மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டு யானை கட்டுப்படுத்தப்பட்டு சங்கிலியால் கட்டப்பட்டது.

இந்நிலையில் மதம் பிடித்த கோயில் யானை மசினி மகாளிகுடியில் உள்ள யானை கொட்டகைக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து யானை மசினி ஜெயா என்ற தனியார் யானை உதவியுடன் வெளியே அழைத்து வரப்பட்டது. கோயிலுக்கு வெளியே சுமித்ரா என்ற யானையும் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் யானை மசினி கோவில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டு மகாளிகுடிக்கு அழைத்து செல்லப்பட்டது.












Click it and Unblock the Notifications