சங்கரராமன் கொலை வழக்கில் விரைவில் மேல்முறையீடு?
காஞ்சிபுரம்: சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் உட்பட 23 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து விரைவில் அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்படக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளராக இருந்த சங்கரராமன் 2004ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் குற்றம்சாட்ட காஞ்சி சங்கராச்சாரியார்கள் உட்பட 23 பேரை அண்மையில் புதுவை நீதிமன்றம் விடுதலை செய்தது.
இருப்பினும் தமிழக சிபிசிஐடி பிரிவு போலீசார் ஆலோசனையுடன் புதுவை அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தேவதாஸ் தெரிவித்திருந்தார். அத்துடன் அவர் காஞ்சிபுரம், சி.பி.சி.அய்.டி. டி.எஸ்.பி.க்கு எந்தெந்த அடிப்படையில் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் குறிப்பிட்டு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
அதில் இடம்பெற்றுள்ளதாவது:

ரவி சுப்பிரமணியம் பல்டி
இந்த வழக்கில் அப்ரூவர் ரவிசுப்ரமணியம் பல்டி சாட்சியானதால் அது தொடர்பாக தனி வழக்காகவே விசாரிக்கலாம். ஆனா, அவரை வழக்கிலிருந்தே விடுதலை செய்திருக்கிறது நீதிமன்றம். இதை எதிர்த்து மறுவிசாரணை நடத்த கோரலாம்.

முன்விரோதமே இல்லையா?
சங்கரராமனுக்கும், ஜெயேந்திரருக்கும் முன்விரோதம் இல்லை என்று நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார். ஆனால் சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில் ஜெயேந்திரருக்கு எதிரா எழுதப்பட்ட கடிதங்களில் இருப்பதெல்லாம் சங்கரராமன் கையெழுத்துதான் என்று வல்லுநர்கள் சாட்சியமே அளித்திருக்கின்றனர்.

சங்கரராமன் குடும்பத்தினர் அடையாள,
காஞ்சி மாஜிஸ்டிரேட் முன்பாக நடந்த அணிவகுப்பில் கொலையாளிகளை சங்கரராமன் குடும்பத்தினர் அடையாளம் காட்டியிருந்தனர். இதை நீதிபதி தமது தீர்ப்பின் போது கவனத்தில் கொள்ள்ளவில்லை.

கொலைக்கு கூலி
மேலும் கொலைக்காக 5 லட்ச ரூபாய் மடத்திலிருந்து கொடுக்கப்பட்டிருப்பதையும் அதில் ஒரு லட்சத்தை ஜெயேந்திரரே கொடுத்திருக்கிறார் என்றும் அரசுத் தரப்பு நிரூபித்த ஆதாரங்களும் ஏற்கப்படவில்லை.

மேல்முறையீடு
இந்த வாதங்களை முன்வைத்து மேல்முறையீடு செய்யலாம் என்று அரசு வழக்கறிஞர் காஞ்சிபுரம் சிபிசிஐடி பிரிவுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளாராம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications