சங்கரராமன் கொலை வழக்கு: ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆஜர்! நவ.5க்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்புக்கான தேதி மட்டும் அறிவிக்கப்பட வேண்டி உள்ளது. தீர்ப்புக்கான தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 24 பேரில் ஜெயேந்திரர், விஜேந்திரர் உள்பட 10 பேர் நேரில் ஆனார்கள். ஆனால், 13 பேர் ஆஜராகவில்லை.
இதையடுத்து, வழக்கு விசாரணையை நவம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் சங்கரராமன் மகன் ஆனந்த் சர்மா ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications