இசைப்பிரியா படுகொலை.. நவ. 8ம் தேதி சரத்குமார் ஆர்ப்பாட்டம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடந்தேறிய இனப்படுகொலைகளைத் தொடர்ந்து இலங்கை அரசின் மீதும் குறிப்பாக இலங்கை அதிபர் ராஜபக்சே மீதும் குற்றச்சாட்டுகள் உலகெங்கிலும் இருந்து வருகிறது.
தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா இதை வலியுறுத்தி வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றி உலகத்தமிழர்கள் அனைவரது ஒட்டுமொத்த உணர்வுகளை உலகுக்கு உணர்த்தி இருக்கிறார்.
இரண்டு தினங்களுக்கு முன்பாக சேனல் 4-ல் ஒளிபரப்பப்பட்ட தமிழீழப் பெண் இசைப்பிரியாவின் கொடூர மரணம் கல்மனங்களைக் கூட கரைய வைப்பதாக இருக்கும் போது மத்திய அரசின் மெத்தனம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக உள்ளது.
எனவே மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும், இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமரும், இந்தியாவின் பிரதிநிதிகளும் பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும், சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் கண்ட ஆர்ப்பாட்டங்கள் வரும் 8.11.2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications