மத்திய நிபுணர் குழுவும் தமிழகத்தை ஒரு தலைபட்சமாக பார்த்தால் எப்படி?..சரத்குமார் வேதனை
சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசும், கர்நாடக அரசும் தமிழகத்திடம் பாரபட்சமாக நடந்து வரும் நிலையில் சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட மத்திய நிபுணர் குழுவும் தமிழகத்தை பாரபட்சமாக பார்ப்பது வேதனை தருவதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய நீர் ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையில் அமைக்கப்பட்ட காவிரி மத்திய வல்லுநர் குழுவும் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது.
கர்நாடகத்திலும், தமிழ்நாட்டிலும் ஆய்வை மேற்கொண்ட இக்குழு, பருவ மழை காரணமாக இரு மாநிலங்களிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும், தமிழகத்தை விட கர்நாடகத்தில் பாதிப்பு அதிகம் என்றும் தெரிவித்திருக்கிறது.
ஆனால் கர்நாடக அணைகளில் இருக்கும் தண்ணீரை பயன்படுத்தி அங்குள்ள விவசாயிகள் சாகுபடியை ஏற்கனவே முடித்துவிட்டு, 2ம் சாகுபடியும் ஒரு சில இடங்களில் நடந்துக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகம் இன்னும் வறட்சியில் உள்ளது. தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டது. சம்பாவும் பாதிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் காவிரி மத்திய வல்லுநர் குழுவும் தமிழகத்தை தொடர்ந்து ஒருதலைப்பட்சமாக பார்ப்பது வேதனை அளிக்கிறது என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications