நிர்மலா தேவி விஷயத்தில் ஆளுநர் அவசரப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: சரத்குமார்
Recommended Video

புதுக்கோட்டை: பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் ஆளுநர் அவசரம் காட்டுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
கணித பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.

இந்நிலையில் இது குறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் அவசரம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை. தமிழக அரசிடம் கூட கலந்து பேசாமல் அவர் அவசரப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பேராசிரியையின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அனைத்து வழக்குகளையும் சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் என்று கூறுவது தவறு.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தான் காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும். கர்நாடக சட்டசபை தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை அமைக்கப்படுமா என்பது சந்தேகம் தான். அதன் பிறகாவது அமைக்கப்படுமா என்பது கேள்விக்குறியே.
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் காவிரி பிரச்சனை தொடர்பாக வரும் 25ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம். மாணவர்களுக்கு செக்ஸ் கல்வி தேவை இல்லை என்று நினைப்பது தவறு. செக்ஸ் கல்வியால் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications