விவேகானந்தர் இன்று இருந்திருந்தால் இன்ஜின் ஆயிலை ஊற்றியிருப்பார்கள்.. சசி தரூர் பரபர கருத்து
விவேகானந்தர் இன்று இருந்திருந்தால் குண்டர்களால் தாக்கப்பட்டிருப்பார் என காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

திருவனந்தபுரம்: சுவாமி விவேகானந்தர் இன்று இந்தியாவில் இருந்திருந்தால் அவரும் சுவாமி அக்னிவேஷ் போல குண்டர்களால் தாக்கப்பட்டிருப்பார் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கடந்த மாதம் ஜார்க்கண்ட்டில் சுவாமி அக்னிவேஷ் தாக்கப்பட்டது குறித்துப் பேசினார்.

நிகழ்ச்சியில் சசி தரூர் பேசுகையில், சுவாமி விவேகானந்தர் இன்று இந்தியாவில் இருந்திருந்தால், சுவாமி அக்னிவேஷ் போல அவரும் குண்டர்களால் தாக்கப்பட்டிருப்பார்.
அவர் முகத்திலும் எஞ்ஜின் ஆயில் ஊற்றி தெருவில் கீழே தள்ளி அடித்திருப்பார்கள். ஏனென்றால், சுவாமி விவேகானந்தர் மக்களை மதிக்க வேண்டும் என்றும் மனிதநேயம் தான் முக்கியம் என்று கூறியவர். அதனால், சுவாமி அகினிவேஷ் தாக்கப்பட்டது போல, சுவாமி விவேகானந்தரும் தாக்கப்பட்டிருப்பார் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சசி தரூர், "மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி கடந்த 4 ஆண்டுகளில் 2,920 மதக் கலவரங்கள் நடந்துள்ளன. நாடு முழுவதும் பசுவதை தாக்குதல் தொடர்பாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பாஜக ஆட்சியில் மட்டும் 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறிய சசி தரூர் பாஜக ஆட்சிக் காலத்தில் மத வன்முறைகளும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான, சசி தரூர், பாஜகவையும், இந்துத்துவா அமைப்புகளையும் அண்மைக் காலமாக கடுமையாக விமர்சித்து வருகிறார். இவர் அண்மையில், வருகிற 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் இந்தியா இந்து பாகிஸ்தானாகிவிடும் என்று விமர்சனம் செய்தார். மேலும், இவர்கள் வருகிற வெற்றி பெற்றால் இந்திய அரசியல் அமைப்பை அழித்துவிட்டு புதிய ஒன்றை எழுதுவார்கள் என்று சசி தரூர் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார் என்பது குறிப்பிடத் தக்கது.
அதே போல, கடந்த மாதம் ஜார்கண்டில் சுவாமி அக்னிவேஷ் இந்துத்துவா அமைப்புகளால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் இருந்து தன்னைக் காப்பாற்றுமாறு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தும் யாரும் வந்து அவரைக் காப்பாற்றவில்லை. பின்னர், அவரை தாக்குதல் நடத்தியவர்களிடமிருந்து பொதுமக்களே காப்பாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications