ஆட்சியை விட கட்சிதான் முக்கியம்... தினகரனுக்கு 'ஜெயில் உபதேசம்' செய்த சசிகலா
அதிமுகவை கைப்பற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என தினகரனுக்கு அட்வைஸ் செய்திருக்கிறாராம் சசிகலா.
Recommended Video

சென்னை: தனிக்கட்சி தொடங்குவதற்கு பதில் அதிமுகவை கைப்பற்றுவதில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும் என தினகரனுக்கு சசிகலா உபதேசம் செய்து அனுப்பி வைத்திருக்கிறாராம்.
எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள். ' தீர்ப்பு சாதகமாக வருமா என்று தெரியவில்லை. அதற்குள் 50 எம்.எல்.ஏக்கள் வரையில் நம்பக்கம் வந்துவிட வேண்டும் எனத் திட்டம் வைத்திருக்கிறார் தினகரன்' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

ஆட்சியை அகற்ற சதி
பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த தினகரன், ஆட்சியை அகற்றுவதற்கான தனது அஸ்திரங்களை விளக்கியிருக்கிறார். இந்த சந்திப்பில், ' நமக்கு எதிராக மூன்று அமைச்சர்கள்தான் தீவிரமாக செயல்படுகிறார்கள். அவர்கள் பக்கம் இருக்கும் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் நம்மிடம் வந்துவிடுவார்கள்.

ஆட்சி நீடிக்க கூடாது
அதிகாரத்தை வைத்துக் கொண்டு அந்த அமைச்சர்கள் செயல்படும் விதத்தை பல எம்.எல்.ஏக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒருவேளை தேர்தல் வந்தாலும் நம்பக்கம் இருப்பதைத்தான் எம்.எல்.ஏக்கள் விரும்புகிறார்கள். ஆட்சிக் கலைப்பை நோக்கி நாம் முடிவெடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். அப்படிச் செய்தால் மட்டுமே நாம் வலுப்பெறுவோம்' எனக் கூறியிருக்கிறார்.

ஆட்சியைவிட கட்சி முக்கியம்
இதற்குப் பதில் அளிக்காமல் சில நொடிகள் மவுனம் காத்த சசிகலா, ஆட்சியைவிட கட்சியே முக்கியம். எதைச் செய்தாலும் நன்றாக யோசித்து முடிவெடு' எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்துக் களமிறங்கிய தினகரன், தங்களுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் பட்டியலைக் கையில் எடுத்திருக்கிறார்.

பல எம்.எல்.ஏக்கள் வருவார்கள்
இதைப் பற்றி தன்னுடைய ஆதரவாளர்களிடம் பேசும்போது, ' அடுத்த வாரத்துக்குள் 12 எம்.எல்.ஏக்கள் வந்துவிடுவார்கள். இன்னும் 15 நாட்களில் நாம் விரும்பும் அளவுக்கு எம்.எல்.ஏக்கள் வருவார்கள் எனக் கூறியிருக்கிறார். அவருடைய வார்த்தைகளைக் கேட்டு உற்சாகத்தில் இருக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். ஆனால் தினகரன் இலவு காத்த கிளியாகத்தான் இருக்க வேண்டும் என்கிறது ஆளும் தரப்பு.












Click it and Unblock the Notifications