அதிமுக தலைமை அலுவலகத்தில் தூக்கி கடாசப்பட்ட சசிகலா பேனர்கள்!
சென்னை:அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டது அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று,ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் மதுசூதனன்,சசிகலா புகைப்படங்களை அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கைவிடுத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை திடீரென்று அதிமுக தலைமைக் கழகத்தில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட பேனர்கள் அகற்றப்பட்டன.இதன் மூலம் ஓபிஎஸ் அணியின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கே வழங்க வேண்டும் என்றும் அதற்கு தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு விலை பேசியும்,பெரும் சிக்கலில் சிக்கிக்கொண்டுள்ளார் தினகரன்.இந்த நிலையில் சசிகலா பேனர்கள் அகற்றம் அதிமுகவில் பலரின் புருவத்தையும் உயர வைத்துள்ளது.இதனையடுத்து இன்றோ அல்லது நாளையோ அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.