10 பேர் கொண்ட குழுவுடன் ஆளுநரைச் சந்தித்தார் சசிகலா.. !
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவை சந்திக்க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவுடன் ராஜ்பவன் சென்றார் சசிகலா.
சென்னை: சட்டசபை அதிமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலா இன்று மாலை ராஜ்பவன் சென்றார். அங்கு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவைச் சந்தித்தார்.
தமிழக அரசியல் களம் பரபரப்பான சூழலை எட்டியுள்ள நிலையில் ஆளுநரின் வருகை அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா தன்னை மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கினார் என்று புகார் கூறியுள்ளார் முதல்வர் ஓபிஎஸ்.

எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தால் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவேன் என்று ஓபிஎஸ் கூறிய உடனேயே பரபரப்பு பற்றிக்கொண்டது. இந்தநிலையில் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். அவரை இன்று இரவு சந்தித்தார் சசிகலா.
10 பேர் மட்டுமே அனுமதி என்று ராஜ்பவன் தரப்பில் கூறப்பட்டிருந்ததால் சசிகலாவுடன் 10 பேர் கொண்ட குழு மட்டும் ராஜ்பவன் போயுள்ளது. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் அமைச்சர்களுடன் தனக்கு ஆதரவு தரும் எம்எல்ஏக்கள் அடங்கிய பட்டியலுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்றார். எம்எல்ஏக்கள் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார் சசிகலா.












Click it and Unblock the Notifications