சசிகலாவுக்கு பரோல் கிடைத்ததற்கு காரணமே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான்- தீபா தடாலடி
மக்களும், தொண்டர்களும் விரும்பினால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன் என்று தீபா தெரிவித்துள்ளார்.
சென்னை: சசிகலாவுக்கு பரோல் கிடைத்ததற்கு காரணமாக இருந்தவரே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்று தீபா பரபரப்பை கிளப்பியுள்ளார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பார்த்துக் கொள்வதற்காக சசிகலா பரோலில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி சசிகலா பரோல் கோரி கடந்த 28-ஆம் தேதி சிறைத் துறையில் விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து அவர் கடந்த வெள்ளிக்கிழமை பரோலில் வெளியே வந்தார்.

தமிழக அரசுதான் காரணம்
நடராஜனுக்கு மாற்று அறுவை சிகிச்சை நடைபெறும் முன்னர் அவருடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சசிகலா கடந்த 28-ஆம் தேதியே பரோலுக்கு விண்ணப்பித்திருந்தார். எனினும் தமிழக அரசு கொடுத்த நிர்பந்தம் காரணமாக அவருக்கு பரோல் கிடைக்க தாமதமாகியது என தினகரனும், அவரது ஆதரவாளர்களும் குற்றம்சாட்டி வந்தனர்.

தீபா பதிலடி
சசிகலாவுக்கு பரோல் தாமதமாக கிடைக்க காரணமாக இருந்தவர் முதல்வர் பழனிச்சாமி என்று தினகரன் குற்றம்சாட்டி வருகிறார். ஆனால் தீபாவோ முதல்வருக்கு ஆதரவாக பதில் கூறியுள்ளார்.

முதல்வர் தான் காரணம்
இதுகுறித்து தீபா சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில் சசிகலாவுக்கு பரோல் கிடைக்க காரணமாக இருந்தவரே முதல்வர் எடப்பாடிதான். மக்கள் விரும்பினால் முதல்வருடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளேன் என்றார். கடந்த சில நாள்களுக்கு முன்பு திருச்சியில் தீபா கூறுகையில் எடப்பாடியும், தினகரனும் அதிமுக தொண்டர்களை ஏமாற்றி வருகின்றனர். பெரும்பான்மை இல்லாத எடப்பாடி அரசு கவிழ்க்கப்பட வேண்டும் என்றார்.

மனமாறிய தீபா
ஆனால் அடுத்த சில நாட்களில் ஸ்ரீரங்கம் கோயிலில் செய்தியாளர்களை சந்தித்த தீபா, மக்களும், தொண்டர்களும் விருப்பப்பட்டால் முதல்வருடன் இணைந்து பணியாற்ற தயார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இரட்டை இலை சின்னமும், அதிமுகவும் தனக்கே என்று கூறி தேர்தல் ஆணையத்தில் தீபா தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களையும் அவர் வாபஸ் பெற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தீபா இதை மறுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications