மகாளய அமாவாசை: திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் ஜெ. தோழி சசிகலா சிறப்பு பூஜை

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மகாளய அமாவாசை தினமான இன்று திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் சிறப்பு வாய்ந்த தினமான மகாளய அமாவாசை தினமான இன்று திருவள்ளூர் வீரராகவர் கோயிலுக்கு நேற்று இரவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சுற்றுப்புற பகுதிகளில் இருந்து இன்று அதிகாலை மேலும் பக்தர்கள் குவிந்தனர்.
பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால் ஒருவழி பாதையான கிழக்கு குளக்கரை சாலையில் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.

Sasikala holds special pooja at Thiruvallur temple

சசிகலா சாமி தரிசனம்

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இன்று மகாளய அமாவாசைக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

நினைத்த காரியம் நடக்கும்

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் அமாவாசை அன்று பக்தர்கள் கோயில் குளத்தில் நீராடி, மூலவரை தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை. தீராத நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் ஐதீகம்.

அமாவாசை தரிசனம்

முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அமாவாசை தினத்தன்று வந்து அதிகாலை வீரராகவ பெருமாள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். தற்போது 3வது முறையாக அமாவாசை தினமான இன்று காலை கோயிலுக்கு சசிகலா வந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண மரியாதை செலுத்தப்பட்டது.

நேர்த்திக்கடன்

அம்மனை தரிசனம் செய்த பின்னர் மூலவரை தரிசனம் செய்த சசிகலா, கோயில் குளக்கரைக்கு சென்று குளத்தில் பால், வெல்லம் ஆகியவற்றை ஊற்றி நேர்த்திக்கடனை செலுத்தினார். தரிசனம் முடிந்து திரும்பிய சசிகலாவுக்கு பிரசாதம் வழங்கினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+