சசிகலா கணவர் நடராஜன் 'தலைமறைவு? டெல்லி குறிவைத்ததால் தப்பி ஓட்டம்?
சசிகலாவின் கணவர் நடராஜன் தாம் கைது செய்யப்படலாம் என்கிற அச்சத்தில் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டாராம்.
சென்னை: சசிகலா கணவர் நடராஜனுக்கும் டெல்லி குறிவைத்ததால் அவர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
அதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்ற கங்கணம் கட்டிக் கொண்டு லாபிகளில் 'களமாடியவர்' நடராஜன். இந்த லாபிகளால் கடும் கோபமடைந்தது டெல்லி.

அடுத்த குறி விவேக்
இதனால்தான் சசிகலா குடும்பமே இல்லாத அதிமுக என்பதில் டெல்லி மும்முரமாக இருந்து வருகிறது. தற்போது சசிகலா, தினகரனைத் தொடர்ந்து விவேக்கு குறி வைத்துள்ளது டெல்லி.

பதுங்கிய எம்.என்.
இதனிடையே தங்களுக்கு எதிரான லாபிகளில் ஈடுபட்ட நடராஜனுக்கும் டெல்லி குறிவைத்திருக்கிறது. இதனை தெரிந்து கொண்ட நடராஜன் வெளியே நடமாடாமல் பதுங்கிவிட்டாராம்.

தினம் ஒரு எண்
சென்னை பெசன்ட்நகர் வீட்டுக்கு நடராஜன் வருவதே இல்லையாம். அவரை யாரும் தொடர்பு கொள்ளவும் முடிவதில்லையாம். இது தொடர்பாக விசாரித்தால், அவர் தினம் ஒரு எண்ணில் இருந்து பேசுகிறார்.. அவர் இருப்பிடமே எங்களுக்கு தெரியாது என கைவிரிக்கிறது சசிகலா அண்ட் கோ.

சிறை, செரீனா
ஏற்கனவே ஜெயலலிதாவை வீழ்த்திவிட்டு கட்சி, ஆட்சியைக் கைப்பற்ற சதி செய்தவர் நடராஜன். இதனால்தான் அவர் மீது ஏராளமான வழக்குகள் பாய்ந்து சிறையிலடைக்கப்பட்டார். நடராஜனுக்கு நெருக்கமான செரீனா மீதும் கஞ்சா வழக்கு பாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications