இன்று பொதுச்செயலராக பதவியேற்பு- எம்ஜிஆர், ஜெ. நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் விட்டு அழுது அஞ்சலி!
அதிமுக பொதுச்செயலராக இன்று சசிகலா பதவியேற்கிறார். முன்னதாக நேற்று எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் சசிகலா அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலா இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்க உள்ளார். இதையொட்டி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் சசிகலா நேற்று மாலை அஞ்சலி செலுத்தினார்.
அதிமுகவின் பொதுச்செயலராகிவிட்டார் சசிகலா. அவர் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று பொதுச்செயலர் பொறுப்பை ஏற்கிறார்.

இதற்காக அதிமுக தலைமையகத்தில் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அங்குள்ள எம்ஜிஆர் சிலை அருகே மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அமைச்சர்களும் வருகை தந்து அஞ்சலி செலுத்தினர்.
அப்போது கண்ணீர்விட்ட சசிகலா பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து மண்டியிட்டு வணங்கினார். சில நிமிடங்கள் அப்படியே நின்று கண்ணீர் மல்க வணங்கி பின்னர் ஜெ. நினைவிடத்தை சுற்றி வலம் வந்தார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்தையும் தொட்டு வணங்கினார் சசிகலா. சசிகலா வருகையையொட்டி ஏராளமான அதிமுக தொண்டர்களும் அங்கு குவிந்திருந்தனர்.
சசிகலா வந்தது முதல் அவர் செல்லும் வரை "கருணை" தாயே எங்கள் உயிர் சின்னம்மாவே என ஒரு நபர் நீண்டநேரமாக கூச்சல் போட்டு கொண்டே இருந்தார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications