போயஸ் கார்டனில் காலில் ரத்தம் வரும் அளவுக்கு அடித்தனர்... சசிகலா புஷ்பா குமுறல்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் தாம் தாக்கப்பட்டதுடன் போலீசாரிடம் லத்தியை கொடுத்தும் அடிக்க வைத்தனர்.. அப்போது என் காலில் ரத்தம் கொட்டியது என்று வழக்கறிஞர்களிடம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா குமுறியுள்ளார்.
சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் சசிகலா புஷ்பா வரும் 29-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமது வழக்கறிஞர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா குமுறலுடன் கூறியதாவது:
முன்ஜாமீன் மனுவில் உள்ள கையெழுத்து தொடர்பான சந்தேகத்தை தெளிவுபடுத்த நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கெல்லாம் நேரில் ஆஜராக தேவையில்லை. உச்சநீதிமன்றத்துக்கு சென்றாவது எப்படியும் முன்ஜாமீன் வாங்கிவிடுவேன்.
முன்ஜாமீன் வாங்காமல் தமிழ்நாட்டுக்குள் ஒருபோதும் கால் வைக்க மாட்டேன். போயஸ் கார்டனில் நடந்ததை அப்படி எல்லாம் சீக்கிரமாக மறந்துவிட முடியாது.
"அவர்கள்" என்னை அடித்ததுடன் போலீஸ்காரர்கள் கையில் லத்தியைக் கொடுத்து அடிக்கச் சொன்னார்கள்..... காலில் ரத்தம் வரும் அளவுக்கு அடித்தார்கள்.
அதனால்தான் ராஜ்யசபாவில் பேசினேன். நான் வாங்கிய அடிகளுக்கு பதில் வேண்டும்.. இப்போது சமரசம் பேசுகிறார்கள்..
எனக்கு ஜெயலலிதா எதுவும் செய்யவில்லை.. எல்லாம் நான் வணங்கிய கடவுள் கொடுத்தது..
இவ்வாறு சசிகலா புஷ்பா கூறியதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications