சசிகலா புஷ்பாவின் 'பாடிகார்ட்' ஹரிநாடார் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!
சசிகலா புஷ்பாவின் ஆதரவாளரான ஹரிநாடார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர் ஹரிநாடார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து சசிகலா புஷ்பா டிஸ்மிஸ் செய்யப்பட்ட பின்னர் டெல்லியில் இருந்து தமிழகத்துக்கு அவர் வரும்போதெல்லாம் நாடார் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார்தான் பாதுகாப்பு அளித்து வந்தார்.

ஹரிநாடார், ராக்கெட் ராஜா மற்றும் சுபாஷ் பண்ணையார் ஆகியோர்தான் சசிகலா புஷ்பாவுக்கு பாதுகாப்பு அளித்து வந்தனர். சசிகலா புஷ்பாவுக்கு எதிரான வழக்கில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் சுகந்தி ஜெய்சன் வீடு அண்மையில் சூறையாடப்பட்டது.
சுகந்தி ஜெய்சன் வீடு சூறையாடப்பட்ட வழக்கில் ஹரிநாடார் அண்மையில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications