நாகர்கோவிலில் சசிகலா.. நாகராஜா கோவிலில் சாமி கும்பிட்டார்
நாகர்கோவில்: கோவில் கோவிலாக வலம் வரும் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் சாமி கும்பிட்டார்.
நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் பிரபலமானது. இங்கு ஆயில்யம் நட்சத்திரத்தையொட்டி பக்தர்கள் அதிகம்பேர் இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வருவார்கள்.தினமும் அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறப்பது வழக்கம்.

வழக்கம்போல இன்றும் கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது அதிகாலை 4.55 மணியளவில் சசிகலா அங்கு சாமி கும்பிட வந்தார். அவரை கோவில் ஊழியர்கள், அழைத்துச் சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர். 5.15 மணிக்கு கோவிலில் இருந்து வெளியே சென்றார் சசிகலா.
அங்கிருந்து அரை கிலோ மீட்ட்ர் தொலைவில் கிருஷ்ணன் கோவில் கிராமத்தி்ல் உள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு அங்கிருந்து காரில் திருச்செந்தூர் புறப்பட்டுப் போனார்.
சமீப காலமாக கோவில் கோவிலாக சென்று வருகிறார் சசிகலா. ஜெயலலிதாவின் வெற்றி்க்காக அவர் போவதாக பலர் சொல்கிறார்கள். வேட்பாளர் பட்டியலுடன் அவர் சாமி கும்பிட்டு வருவதாகவும் கூறுகிறார்கள்.
திருச்செந்தூரில் சசிகலா - சுதாகரன்
திருச்செந்தூர் சென்ற சசிகலா அங்கு முருகன் கோவிலில் சாமி கும்பிட்டார். அதேபோல ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனும் இன்று திருச்செந்தூர் வந்து சாமி கும்பிட்டார்.












Click it and Unblock the Notifications