75 பசங்க ப்ளூ வேல் விளையாடுறாங்கப்பா, காப்பாத்துங்க.. விக்னேஷின் தாய் கதறல்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ப்ளூவேல் விளையாட்டுக்கு பலியான மதுரை மாணவன்- வீடியோ

    மதுரை: தனது மகனுடன் தொடர்பில் ஒரே நெட்வொர்க்கில் உள்ள 75 மாணவர்கள் ப்ளூ கேம் விளையாடி வருவதாக தற்கொலை செய்து கொண்ட விக்னேஷின் தாய் தெரிவித்தார்.

    மதுரை மாவட்டம் விளாச்சேரியைச் சேர்ந்த வனிதா, ஜெயமணி என்பவரின் மகன் விக்னேஷ். இவர் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். புளூவேல் விளையாட்டை தன் செல்போனில் டவுன்லோடு செய்து தொடர்ந்து விளையாடி வந்துள்ளார் விக்னேஷ்.

    Save 75 friends who is playing Blue Whale game, Mom cries

    புதன்கிழமையன்று விக்னேஷின் பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த விக்னேஷ் புளுவேல் விளையாட்டை விளையாடியுள்ளார். முடிவில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இறப்பதற்கு முன்னர் ப்ளூவேல் கேம் விளையாட்டல்ல விபரீதம் என்றும் ஒருவர் உள்ளே சென்றால் வெளியே வரமுடியாது என்றும் அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார். மேலும் அவரது கையில் பேனாவில் நீல திமிங்கலத்தின் படத்தை வரைந்துள்ளார்.

    அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது தாய் வனிதா கூறுகையில் இளைஞர்களை அழிக்கும் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என் மகனுடன் தொடர்பில் உள்ள 75 மாணவர்கள் விளையாடி வருகின்றனர்.

    அவர்களை காப்பாற்றுங்கள். இளைஞர்களை அழிக்கும் நோக்கில் இந்த விளையாட்டு உள்ளது என்றும் அவர் அழுதபடி கூறினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+